டிரெண்டிங்

மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேன பங்கேற்பு

rajakannan

நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 351 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டுமே 303 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. 214 தேர்தலில் பாஜக மட்டும் 282 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். மே 30 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு நாட்டு தலைவர்களை அழைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இலங்கை அதிபர் அலுவலம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அதிபர் சிறிசேன மோடியிடன் பேசியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள், பாஜக மற்றும் மோடியின் வெற்றிக்கு சிறிசேன உள்ளிட்ட இலங்கை அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.