டிரெண்டிங்

சாரண, சாரணியர் தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா தோல்வி

webteam

தமிழக சாரண, சாரணியர் தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா தோல்வியடைந்தார். 

தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும், பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநர் மணியும் போட்டியிட்டனர். 

இந்தத் தேர்தல் இன்று சென்னையில் நடந்தது. வாக்குப்பதிவுக்கு பின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மொத்தம் பதிவான 286 வாக்குகளில் ஹெச்.ராஜா 52 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். மணி 232 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இரண்டு ஓட்டுகள் செல்லாதவை. தேர்தல் முடிவுகளை தேர்தல் அதிகாரி கலாவதி தெரிவித்தார்.

சாரண சாரணியர் தேர்தலில் எச்.ராஜா போட்டியிடுவது குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலத்த விமர்சனங்களைக் கிளப்பி இருந்தன. இந்த நிலையில் அவர் தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார்.