டிரெண்டிங்

சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் சசிகலா - டிஐஜி ரூபா

webteam

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பொதுச் சிறைச்சாலையில் சசிகலாவுக்கு சொகுசு கட்டிலும், மெத்தையும் வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக சிறைத் துறையின் முன்னாள் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார். 

சசிகலாவுக்கு சிறையில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவு நடத்தி வரும் விசாரணையின்போது ரூபா இதைக் கூறியுள்ளார். கர்நாடக சிறைக் கைதிகள் வெள்ளை சீருடை அணிவதாகக் கூறியுள்ள ரூபா, சசிகலாவும் இளவரசியும் சீருடை அணிவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா நடமாடுவதற்காக 120 முதல் 150 அடி வரையிலான நீளம் கொண்ட வராண்டா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் யாரும் நுழையாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையில் ரூபா கூறியுள்ளார். சசிகலா தொடர்பான வீடியோவை வெளியிட்ட ஏஎன்ஐ செய்தி நிறுவனம், இந்தத் தகவல்களை தெரிவித்துள்ளது.