டிரெண்டிங்

RCB vs DC : டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு!

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் 22வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதனால் பெங்களூர் அணி முதலில் பேட் செய்கிறது. 

இரு அணிகளும் ஐபிஎல் அரங்கில் 25 முறை நேருக்கு நேர் விளையாடி உள்ளன. இதில் பெங்களூர் 14 போட்டிகளிலும், டெல்லி 10 போட்டிகளிலிலும் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. 

இரு அணிகளும் இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடி தலா 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும்.