டிரெண்டிங்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: தமிழகத்தில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

நிவேதா ஜெகராஜா

சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளின் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சியில் வார்டு எண் 51 , 179ஆவது வார்டு மறுவாக்குப்பதிவு நடைபெறும்.

இதுவே மதுரையில் திருமங்கலம் நகராட்சியில் வார்டு எண் 17 திங்கட்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறும்; அரியலூரில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வார்டு எண் 16 மறுவாக்குப்பதிவு நடைபெறும்; திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 25 நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்ட இடங்களான சென்னையில் பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் வார்டு எண் 179ல் 5059ஆம் வாக்குச்சாவடி ஆகியவற்றிலும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த மறுவாக்குப்பதிவு நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம், அதாவது, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை கோவிட்-19 அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை பதிவு செய்யப்படும்.