டிரெண்டிங்

நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர்! அதிர்ச்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

EllusamyKarthik

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பவுலிங் அஸ்திரம் யார் என்றால் அது இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் கிரிக்கெட் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகியுள்ளார் அவர்.

இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடாத அவர் எஞ்சிய போட்டிகள் உட்பட நடப்பு சீசனிலிருந்தே விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்து அவதிப்பட்டு வந்தார் ஆர்ச்சர். அதனால் அவர் ராஜஸ்தானுக்காக விளையாடுவாரா என்பதே சந்தேகமாக இருந்தது. இந்நிலையில் அவர் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸும் ராஜஸ்தான் அணியிலிருந்து காயத்தினால் விலகியிருந்தார். தற்போது ஆர்ச்சரும் விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.