டிரெண்டிங்

வயநாட்டில் ராகுல்காந்தி நாளை வேட்புமனுத் தாக்கல்

webteam

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.

வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தென்னிந்தியாவில் போட்டியிட வேண்டும் என்று இங்குள்ள காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடலாம் எனத் தகவல் வெளியானது. 

அதன்படி அவர் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். வயநாட்டில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து விளக்கமும் அளித்திருந்தார். 

இதுகுறித்து ராகுல்காந்தி பேசுகையில், “தற்போதைய அரசு தங்களை கருத்தில் கொள்ளவில்லை எனத் தென்னிந்திய மக்கள் மத்தியில் ஒரு எண்ணம் உள்ளது. நரேந்திர மோடி குறித்து தென்னிந்திய மக்கள் எதிர்ப்புணர்வு கொண்டுள்ளனர். நாட்டின் முடிவுகளில் தாங்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை என அவர்கள் உணர்கின்றனர். எனவே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பதை தென்னிந்தியாவுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதனால்தான் கேரளாவிலிருந்து போட்டியிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சகோதரி பிரியங்கா காந்தியும் செல்கிறார்.