டிரெண்டிங்

நடிகர்களை மக்கள் ஏற்பதுபற்றி தேர்தலில் தெரியவரும்: ராகவா லாரன்ஸ்

Rasus

நடிகர்களை மக்கள் ஏற்கிறார்களா என்பது தேர்லில் தெரியவரும் என திரைப்பட இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மதுரை சென்றுள்ள ராகவா லாரன்ஸ், கள்ளழகர் கோயில் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது புதியதலைமுறைக்குப் பேசிய ராகவா லாரன்ஸ், ஆன்மீக அரசியலில் தாம் ரஜினியின் காவலனாக பணியாற்ற இருப்பதாகவும், நடிகர்களை மக்கள் அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தேர்தலின் முடிவுக்குப் பின்னரே தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.