டிரெண்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனையை முறியடித்த பஞ்சாப் கிங்ஸ்! அப்படி என்ன சாதனை அது?

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் சென்னை வசமிருந்த சாதனையை தகர்த்துள்ளது பஞ்சாப். இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி நிர்ணயித்த 206 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டிப் பிடித்துள்ளது பஞ்சாப்.  

அதன் மூலம் ஐபிஎல் அரங்கில் 200 ரன்களுக்கு மேலான டார்கெட்டை நான்கு முறையாக வெற்றிகரமாக சேஸ் செய்த ஒரே அணி என்ற சாதனையை பஞ்சாப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் 200 ரன்களுக்கு மேலான டார்கெட்டை மூன்று முறை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. தற்போது அதனை பஞ்சாப் முறியடித்துள்ளது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 200 ரன்களுக்கு மேலான டார்கெட்டை இரண்டு முறை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளன. இன்றைய லீக் ஆட்டத்தில் புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.