டிரெண்டிங்

புதுச்சேரி பெண் தாதா எழிலரசி நாகூரில் கைது

webteam

போலீசாரால் தேடப்பட்டு வந்த புதுச்சேரி பெண் தாதா எழிலரசி நாகூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த பெண் தாதா எழிலரசி பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். இதனிடையே அவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்ததாக பேசப்பட்டது. அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பாஜகவின் இணைந்த ரவுடிகள் லிஸ்டில் எழிலரசி பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நாகூர் மெயின்ரோட்டில் காரில் பதுங்கியிருந்த தாதா எழிலரசியை காரைக்கால் போலீசார் துரத்தி பிடித்தனர்.