டிரெண்டிங்

“தயவு செய்து அந்த இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்யாதீர்கள்” ... போஸ்டர் அடித்த ஊர்மக்கள்!

kaleelrahman

கருணைமிக்க இன்ஸ்பெக்டர் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி திருப்பரங்குன்றம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருப்பவர் மதனகலா. இவர் கொரோனா காலத்தில் மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஊரடங்கு காலத்தில் திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உணவில்லாமல் தவித்த குரங்குகளுக்கு உணவளித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில், அவரை தேனி மாவட்டம் போடிக்கு இடமாற்றம் செய்யப்போவதாக வந்த தகவலை அடுத்து, ஊர் பொதுமக்கள், மதனகலா திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியமர்த்தப் பட்டதிலிருந்து, சட்டம் ஒழுங்கை மனிதாபிமானத்தோடு காத்து வந்தார். ஆகையால் அவரை இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என போஸ்டர் அடித்து நகர முழுவதும் ஒட்டியுள்ளதோடு மாநகர காவல்துறைக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.