டிரெண்டிங்

டோக்கியோ புறநகரில் போட்டிக்கு எதிராக போர்க்கொடி

jagadeesh

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், போட்டியை ரத்து செய்யக்கோரி பேரணி நடத்தப்பட்டது.

டோக்கியோவின் புறநகர் பகுதியில் நடந்த இந்த பேரணியின்போது, வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள், ஜப்பானுக்கு வருவதால், பல்வேறு வகையான கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக அவர்கள் முழக்கம் எழுப்பினர். தவிர ஜப்பானிலும் கொரோனா தொற்று பரவி வருவதால், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்களின் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும் என அவர்கள் பதாகைகள் ஏந்தியபடி பேரணி சென்றனர்.