டிரெண்டிங்

கமல் கட்சியில் பொறுப்பு...மகிழ்ச்சியில் பிரதமரின் டிவிட்டர் கணக்கை நிர்வகித்த பெண்!

Veeramani

மகளிர் தினத்தில் ஒருநாள் மட்டும் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை நிர்வகித்த தமிழகத்தை சேர்ந்த பெண் சினேகா மோகன்தாஸ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார்.

ஆதரவற்ற மக்களுக்காக “ஃபுட் பேங்க் இந்தியா” என்ற அமைப்பை நடத்திவரும் சினேகா மோகன் தாஸின் சேவையை பாராட்டி இந்த ஆண்டு மார்ச்-8 மகளிர் தினத்தன்று, பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

தற்போது சினேகா மோகன்தாஸ் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இவருக்கு சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி சினேகா தனது டிவீட்டில் “என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும்,மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணிசென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் & நம்மவர் உயர்திரு டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி” என கூறியுள்ளார்.

2021 சட்டப்பேரவை தேர்தலில் மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று கூறியுள்ள கமல், கடந்த இரு தினங்களாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.