டிரெண்டிங்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

Sinekadhara

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்த நிலையில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்று தலைமையிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கியது.

அதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாள்களாக டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் குழு கூட்டமானது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று ஐந்து மாநில தேர்தல் வேட்பாளர் குறித்து முழுமையாக ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் சார்பாக மறைந்த எம்.பி வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது கவனத்துக்குரியது.