டிரெண்டிங்

சென்னை, சேலத்தில் காவல்துறையினர் தபால் வாக்கு

jagadeesh

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சென்னை மற்றும் சேலத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள காவல்துறையினர் இன்று தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு தபால் வாக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் பணிபுரியும் காவல்துறையினர் சுமார் 6 ஆயிரம் பேர் , இன்று தங்களது தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தபால் வாக்குகள் செலுத்துவதற்காக வசதி செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு தொடங்கிய தபால் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதேபோல் சேலத்திலும் காவல்துறையைச் சேர்ந்த 1,773 பேர் தபால் வாக்களிக்கின்றனர். இதற்காக சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தனித்தனியே வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.