டிரெண்டிங்

பழனி: ’இந்தி தெரியாது போடா...’ அரசு சுவற்றில் விளம்பரம் செய்த திகவினர் மீது வழக்குப்பதிவு

kaleelrahman

பழனியில் அரசு மருத்துவமனை சுவற்றில் ஹிந்தி தெரியாது போடா என்று அனுமதியின்றி எழுதிய தி.க.வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருகிற செப்டம்பர் 17ம்தேதி தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனைமுன்னிட்டு பழனியில் திராவிடர் கழகம் சார்பில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. பழனி அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரில் பெரியார் பிறந்தநாள் குறித்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அனுமதியின்றி அரசு மருத்துவமனை சுவற்றில் விளம்பரம் செய்ததாக திராவிடர் கழக மாவட்ட தலைவர் இரணியன் என்ற மகேந்திரன், நகரதலைவர் அழகர்சாமி, மாவட்ட துணைத்தலைவர் அங்கப்பன், மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹிந்தி தெரியாது போடா என்று சர்ச்சைக்குறிய சுவர்விளம்பரம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.