டிரெண்டிங்

காவிரி நீர் தமிழகத்தின் உரிமை: சுப்ரமணியன் சுவாமிக்கு ஓபிஎஸ் பதில்!

webteam

நடுவர் மன்ற தீர்ப்பின் படி காவிரி நீர் தமிழகத்தின் உரிமை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

காவிரி நீர் தொடர்பாக பேசியிருந்த பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி, தமிழகத்திற்கு காவிரி நீர் தான் வேண்டுமென்றால் அது கிடைக்காது என்றும், அந்த விவகாரத்தில் அனைவரும் நாடகமாடுகிறார்கள் என்றும் கூறியிருந்தார். அத்துடன் தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டுமென்றால் கடல்நீரை உப்பு நீக்கி பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்-க்கு சந்தேகம் என்றால் அவர்கள் தன்னிடம் கேட்கட்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக பதிலளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், “17 ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்றம் தீவிர விசாரித்து அதன்மூலம் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு இது. இந்த தீர்ப்பின் படி நமக்கு தண்ணீர் தரப்பட வேண்டிய உரிமை இருக்கிறது. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என சுப்ரமணியன் சுவாமி கூறியதற்கான விளக்கத்தை அவர் தான் விளக்கிக் கூற வேண்டும்” என்றும் தெரிவித்தார்.