டிரெண்டிங்

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் 3 மணி நேரம் ஆலோசனை

webteam

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மூத்த நிர்வாகிகளுடன் மூன்று மணி நேரமாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார். இதில்  இணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை காலை விசாரணைக்கு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. காவிரி விவகாரத்தில் வரவுள்ள உத்தரவு குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசியதாக தெரிகிறது. கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. 

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநில முதல்வர்கள் அடங்கிய தேசிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றுள்ளது.