டிரெண்டிங்

நிதிஷ் ரானா ஜெர்சியில் காட்டிய பெயர் யாருடையது ? உருக்கமான பின்னணி!

jagadeesh

டெல்லிக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்த கொல்கத்தா அணியின் நிதிஷ் ரானா "சுரிந்தர்" என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை கையில் விரித்தபடி காட்டினார். அது யாருடைய பெயர் என்ற சுவாரஸ்யமான செய்தி இப்போது வெளியாகி இருக்கிறது.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனையடுத்து கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், நிதிஷ் ரானாவும் களமிறங்கினார்கள். இதில் சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்து ராகுல் திரிபாதியும் 13 ரன்களில் அவுட்டாக, தினேஷ் கார்த்திக் 3 ரன்களில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார்.

ஆனால் இறுதி வரை சிறப்பாக விளையாடிய ரானா 20 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளுக்கு 81 ரன் விளாசினார். இறுதியாக 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புகக்கு 194 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து டெல்லி வெற்றிப் பெற 195 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் அரை சதம் கடந்த நிதிஷ் ரானா "சுரிந்தர்" என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை கையில் ஏந்தியபடி காட்டினார். யார் அந்த சுரிந்தர் என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. அதனை கொல்கத்தா அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதாவது அந்தப் பெயர் ரானாவின் மாமானாருடையது. அவரின் பெயரின் சுரிந்தர் மார்வா. இவர் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து தன்னுடைய மாமனாருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ரானா அவர் பெயர் பொறித்த ஜெர்சியை காட்டியுள்ளார்.