டிரெண்டிங்

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமமுக வேட்பாளருக்கு புதிய சிக்கல்!

Sinekadhara

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சி 15வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்ட பக்ருதீன், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ரகுமத்துல்லாவை விட ஒரு ஓட்டு அதிகமாக பெற்றூ வெற்றி பெற்றார்.

இந்நிலையில் பக்ருதீனின் மனைவி மும்தாஜ்க்கு அதே வார்டில் இரு ஓட்டுகள் இருப்பதும், இரு ஓட்டுகளையும் அவர் செலுத்தியிருப்பதும் திமுகவினரால் கண்டறியப்பட்டு சமுக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து சமுக வலைதளங்களில் சர்ச்சை உருவாகியுள்ள நிலையில், வாக்கு செலுத்தும் போதோ, வாக்கு எண்ணிக்கையின் போதோ முறைகேடுகள் குறித்து புகார் அளித்தால் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் திமுகவினர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.