திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் சீனிவாசன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பரும், திமுக பகுதி செயலாளருமான சீனிவாசனின் பள்ளிக்குப்பம் அருகே உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர். இதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி, வேலூரில் உள்ள சிமென்ட் குடோனில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக இரு தினங்களுக்கு முன் காட்பாடி - காந்திநகரில் உள்ள துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். மேலும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் அவரது பண்ணை வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.