டிரெண்டிங்

நெல்லையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: பலத்த பாதுகாப்பு

Rasus

நெல்லையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்காக முதலமைச்சர் பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். விமானத்தில் தூத்துக்குடி சென்று அங்கிருந்து காரில் நெல்லை செல்லவுள்ளார்.

பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதனிடையே அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் திறந்துவைத்தனர். விழாவில், 87 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் பரிசுகளையும் வழங்குகிறார்.

சுமார் 118 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணிக்கும் முதலமைச்சர் பழனிசாமி, 528 கோடியே 91 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். முதலமைச்சரின் வருகையையொட்டி நெல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.