2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். அதன்படி இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளிலும் Model code of conduct எனப் படும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். இதைப் பின்பற்றாமல் மீறனால் அது குற்றமாகும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய வேண்டாதவை குறித்து அறிவுறித்தியுள்ளது. இது அரசியல்வாதிகளின் பேச்சுகள், கட்சிகளின் வாக்குறுதிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் அன்று செய்யக்கூடாதவை போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களைத் தருகின்றன.
தேர்தல் நடத்தை விதிமீறல்கள்:
ஆகியவை தேர்தல் நடத்தை விதிமீறல்கள் ஆகும்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் பாஜகாவின் அமித் ஷா மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அசாம் கான் ஆகியோர் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அதன்பிறகு அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்பு கேட்டதையடுத்து அவர்கள் மீதான தடையை தேர்தல் ஆணையம் விலக்கியது குறிப்பிடத்தக்கது.