டிரெண்டிங்

மணாலியில் புதுவிதமான மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமகன்!

webteam

ஹிமாச்சல பிரதேச மாநிலம் மணாலி தொகுதிக்குட்பட்ட 8 ஆவது வாக்குச்சாவடி  மையத்தில் திருமணக் கோலத்தில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த மணமகன் அங்குள்ள அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

மணமகளில்லாமல், மணமகன் மட்டும் புதுவிதமான மணக்கோலத்தில் வந்து தன் ஜனநாயக கடமையாற்றினார். ஒவ்வொரு தேர்தலிலும் மணமக்கள் மணக்கோலத்தில் வந்து வாக்களித்து செல்வது தற்போது ட்ரெண்டாக இருந்தாலும், இந்த மணமகன் புது விதமாக வந்து வாக்களித்தது, காண்போரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

மணக்கோலத்தில் பணமாலையுடன் வந்து தன் ஜனநாயக கடமையாற்றியது மட்டுமல்லாமல், தம் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.