டிரெண்டிங்

“மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்” - ஸ்டாலின் கருத்து

“மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்” - ஸ்டாலின் கருத்து

webteam

தேசத்தை பாதுகாக்க அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் எனவும் இது ஜனநாயக நிர்பந்தம் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநில முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய ராகுல்காந்தி, நமது நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியுள்ளதாகவும் அதனால் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியாவை பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் நாடு தற்போது இக்கட்டான நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

அவரைத் தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு ஜனநாயகத்தின் தேவையே இது எனவும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச இருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், தேசத்தை பாதுகாக்க அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் எனவும் இது ஜனநாயக நிர்பந்தம் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திபாபு நாயுடு சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.