தவெக தலைவர் விஜய் திருச்சியில் மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு உரையாற்றியிருந்த நிலையில், அரியலூரில் அண்ணாசிலை முன்பு உரையாற்றுகிறார்.
தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பரப்புரையில் இன்று முதல் டிசம்பர் 20 வரை ஈடுபட உள்ளார். இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 13) சனிக்கிழமை முதற்கட்டமாக திருச்சி, அரியலூர், திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் பரப்புரையில் தவெக தலைவர் விஜய் ஈடுபடவிருப்பதாக் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பரப்புரையில் ஈடுபர் இன்று காலை சென்னையிலிருந்து திருச்சிக்கு தனிவிமானம் மூலம் வந்தடைந்தார் விஜய். திருச்சியில் 10.30 மணி முதல் 11.00 வரை அவருக்கு பேச காவல்துறை அனுமதியளித்திருந்த நிலையில், தொண்டர்களின் கூட்டத்தினால் 4 மணிநேரம் தாமதமாக 2.30 மணிக்கே பரப்புரை நடக்கும் இடமான மரக்ககடை பகுதிக்கு வந்து சேர்ந்தார். பின்னர், அங்கு உரையாற்றிய நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது உரையை பாதியிலேயே முடித்துக்கொண்டார். பின்னர் அங்கிருந்து இரண்டாவதாக உரையாற்றவிருக்கும் அரியலூருக்கு கிளம்பினார். இந்த நிலையில் தற்போது அரியலூர் வந்தடைந்திருக்கிறார்.அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
விஜய் பேசுகையில், "திருச்சியில் தொடங்கிய எல்லாம் திருப்புமுனையாக அமையுமென சொல்வார்கள். அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அண்ணா தேர்தலில் நிற்கவேண்டுமென நினைத்தது திருச்சியில்தாந். எம்ஜிஆர் தனது முதல் மாநில மாநாட்டை நடத்தியது திருச்சியில்தான். அப்படி திருச்சிக்கு நிறைய வரலாறு இருக்கிறது" என்றார். இந்நிலையில், விஜய் பேசத்தொடங்கியதும் மைக் கோளாறு ஏற்பட்டது.
4 மணிநேரத்திற்கு பிறகு பரப்புரை நடக்கும் இடமான மரக்கடை பகுதிக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில், மரக்கடை பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றவிருக்கிறார்.
தவெக தொண்டர்கள் அனுமதியின்றி ஆபத்தான முறையில் வீடுகளின் மேற்கூரைகளில் ஏறியுள்ள நிலையில், மரக்கடை பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
பரப்புரை நடைபெறும் இடமான மரக்கடைக்கு, திருச்சி விமானநிலையத்திலிருந்து சுமார் 4 மணிநேர பயணத்திற்குப் பின் வந்தடைந்தார் விஜய்
தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு, கண்டிப்பாக 2026ல் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும். நாங்கள் வேண்டுமென்று பரப்புரைக்கு தாமதமாக செல்லவில்லை; மக்கள் வெள்ளம் அப்படி இருக்கிறது; காவல்துறை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம் - தவெக கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்
விஜய் பரப்புரை நடக்கும் இடமான மரக்கடைக்கு வர தொடர்ந்து தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில், பரப்புரை நடக்கும் இடத்திற்கு தவெக தலைவர் விஜய் வந்துசேர இன்னும் 850 மீட்டர்களே உள்ளன.
தவெக தலைவர் விஜய் பரப்புரை நடைபெறும் இடத்திற்கு வந்து சேர தாமதமாகி வரும் நிலையில், விஜய்க்கு தவெக தொண்டர்கள் வேல், பெரியார் படம், பாசிமாலை மற்றும் தவெக கட்சித் துண்டுகள் போன்றவற்றை பரிசுகளாக வழங்கி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பரிசுப் பொருட்களை வாகனத்தில் இருந்தபடியே அதனை வாங்கிக்கொண்டு வருகிறார்.
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி திமுக இல்லை என்றும் திமுக என்னும் இரும்புக்கோட்டையை எந்த கொம்பனாலும் தொடமுடியாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் வெளியிட்டிருக்கும் நிலையில், அதற்கு பதிலளித்துள்ள தவெக கொள்கை பரப்புச்செயலாளர் ராஜ்மோகன், “எஃகு கோட்டையோ, இரும்புக் கோட்டையோ, மலைக் கோட்டையோ... அந்தக் கோட்டையில் ஓட்டை போடுவதில் எங்கள் தலைவர் விஜய் ஸ்பெஷலிஸ்ட்; நாங்கள் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டவில்லை; இது, தன் எழுச்சியாக வரும் கூட்டம்” என தெரிவித்துள்ளார்.