டிரெண்டிங்

வாக்குப்பதிவு நாளில் அனைத்து பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவு

Sinekadhara

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6-ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் எல்லோரும் வாக்களிக்கவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 135பி அடிப்படையில் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார். அனைவருக்கும் வாக்களிக்க ஏதுவாக தினக்கூலி, தற்காலிகம், ஒப்பந்தம் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.