டிரெண்டிங்

கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் வந்தார் திமுக தலைவர் மு.கருணாநிதி

webteam

கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்திற்கு  திமுக தலைவர்  மு.கருணாநிதி இன்று வருகை தந்தார். 

கடந்த ஒரு ஆண்டாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் சிக்கிச்சை பெற்று வந்தார். ஆகவே பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அவலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முரசொலி பவளவிழா கண்காட்சி அரங்கை காண வேண்டி அவர் வருகை தந்தார். அங்கே அமைக்கப்பட்டுள்ள வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றாக பார்வையிட்டார். இருபது நிமிடங்களை அங்கு செலவிட்டார். அதன் பின் அவர் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.அவருடன் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினும் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.