டிரெண்டிங்

கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக சிபிஐ நோட்டீஸ்

webteam

முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கான அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி பெற்றுத் தந்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக, கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அண்மையில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பாக, வரும் 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ தலைமையகத்தில் நேரில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.