டிரெண்டிங்

பெரம்பூர்: கண்ணையா மகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

webteam

தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையாவின் மகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் வீடு பெரம்பூரில் உள்ளது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

சாஃப்ட்வேர் கம்பெனி நடத்தி வரும் பிரகாஷ் வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. குளத்தூரில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக கண்ணையாவின் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்ததாக கூறப்படும் நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.