கமல், 100 நாட்களில் தேர்தல் வந்தால் கூட சந்திக்கத் தயார் என்றும், தனியாகப் களம் காணப் போவதாகவும் அதிரடியாக பேசியிருந்தார். இதுகுறித்து மக்களின் மனதை அறியும் விதமாக, புதிய தலைமுறை இணையதளத்தில் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு தேர்தலை சந்திக்க தயார் என கமல் கூறியிருப்பது, உண்மையான சமூக அக்கறை என 64.6 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர். வழக்கமான அரசியல் ஆசை என 20.2 சதவிகித மக்களும், அசட்டுத் துணிச்சல் என 15.2 சதவிகித மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.