டிரெண்டிங்

வெல்வது நானில்லை...நாம்: கமலின் அடுத்த ட்வீட்

webteam

ட்விட்டரில் அவ்வப்போது பதிவுகளைப் போட்டு பரபரப்பைக் கிளப்பி வரும் கமல், இன்றும் ஒரு ட்வீட்டைப் போட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

மாலையில் முரசொலி பவளவிழாவில் பங்கேற்ற கமல்ஹாசன், பின்னர் ட்விட்டரில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில் அவர், "விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே. ஓடி எனைப்பின்தள்ளாதே களைத்தெனைத் தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்" என்று எழுதியுள்ளார்.

முன்னதாக முரசொலி பவளவிழாவில் அவர் பேசுகையில், "ரஜினியோடு சேர்ந்து நானும் மேடைக்குச் செல்லாமல் இருந்து விடலாம் என்றுதான் நினைத்தேன். பிறகுதான் தற்காப்பு அல்ல தன்மானமே முக்கியம் என்று முடிவு செய்தேன்" என்று கூறினார்.

அவர் பதிவிட்டுள்ள மற்றொரு ட்வீட் செய்தியில், “புரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே.மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு . தேசியமும் தான்” என்று தெரிவித்துள்ளார்.