கடந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழரது தலையிலும் ரூ.45 ஆயிரம் கடனை சுமத்தப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு நேற்று தாக்கல் செய்தது. துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை தாக்கல் செய்தார். அதிமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
இந்நிலையில், ‘மக்கள் நீதி மய்யம் கட்சி’யின் தலைவர் கமல்ஹாசன், நிதிநிலை அறிக்கையை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்த நிதிநிலை அறிக்கை, பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளார்.
கமல்ஹாசன் அறிக்கையின் அம்சங்கள்:-