டிரெண்டிங்

சபாநாயகரின் முடிவில் தலையிடுவது உரிமை மீறல் - ஜெயக்குமார் கருத்து

webteam

சபாநாயகரின்‌ முடிவு குறித்து கருத்துக்கூறுவது உரிமை மீறல் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

18எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் சபாநாயகரையும், அவரின் முடிவையும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயக்குமார், சபாநாயகரின்‌ முடிவு குறித்து கருத்துக்கூறுவது உரிமை மீறல் என கூறினார். மேலும் தினகரன் குறித்து கூறிய அவர், கண்கெட்ட பிறகு தினகரன் சூரிய நமஸ்காரம் செய்வதாக தெரிவித்தார். இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.