friends
friends free pik
டிரெண்டிங்

”மேரேஜ் பண்ணிக்கிறேன்” ஆண் நண்பரின் பேச்சை நம்பி பாலின அறுவை சிகிச்சை செய்த நபர் போலீசில் புகார்!

Jayashree A

காதல் ஆண் பெண் இருபாலருக்குள் மட்டுமே வருவதல்ல... ஆண் ஆணையும் பெண் பெண்ணையும் காதலித்து திருமணமும் செய்துக்கொள்கின்றனர். இத்தகைய காதல் தவறு இல்லை என்று சட்டமே சொல்கிறது.

இந்நிலையில், ஒரே பாலினத்தைச்சேர்ந்த இரு ஆண்கள் இயற்கைக்கு முரணாக ஒருவருக்குள் ஒருவர் காதலித்து வந்த நிலையில், ஒருவர் மற்றொருவரை, “நீ பெண்ணாக மாறினால் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று கூறியதால், மற்றொருவர் பெண்ணாக மாறியுள்ளார். ஆனால் அதற்கு அடுத்து என்ன நடந்தது ? வாங்க பார்க்கலாம்.

உத்திரபிரதேசம் கான்பூரை சேர்ந்த வைபவ் சுக்லா மற்றும் மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவரும் கடந்த 2021 முதல் சோஷியல் மீடியாவின் மூலம் அறிமுகமாகி ஒருவருக்குள் ஒருவர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நண்பர்களுக்குள் ஒற்றுமை அதிகமாக இருக்கவே, இவர்களின் நட்பு சோஷியல் தளத்தில் வழிந்தோடி ஒரு கட்டத்தில் இருவரும் காதலர்களைப்போல காதலிக்கவும் தொடங்கியுள்ளனர். இவர்கள் காதல் எல்லையையும் மீறியதாக இருந்திருக்கின்றது.

இந்நிலையில், வைபவ் சுக்லாமீது அந்த ஆண் நண்பர் இந்தூர் விஜய்நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “நானும் சுக்லாவும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்தோம். இருவருக்குள்ளும் இயற்கையை தாண்டிய உறவுமுறை இருந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டபொழுது, சுக்லா என்னை பெண்ணாக மாறினால் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றார். இவரின் வாக்குறுதியை நம்பி நான் பல லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சையின் உதவியால் ஒரு பெண்ணாக மாறினேன். ஆனால் தற்பொழுது வைபவ் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். அதே சமயம் இயற்கைக்கு எதிரான தாம்பத்திய உறவிற்கு வற்புறுத்துவதுடன் என்னை மிரட்டியும் வருகிறார்.” என்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து சுக்லாவிற்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட வைபவ் சுக்லா எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில், போலிசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.