டிரெண்டிங்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்களித்த சினிமா பிரபலங்கள்

JustinDurai

சென்னையில் நடிகர் அருண் விஜய்,  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் நடிகர் அருண் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல் தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதையும் படிக்கலாம்: "இளைஞர்கள் கண்டிப்பாக ஓட்டுப்போட வேண்டும்"- ஜனநாயக கடமையாற்றிய மூத்த தம்பதியர்