”தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தக்கூடாது. எம்.டெக் படிப்பில் கடந்த முறையின் மத்திய அரசு ஒதுக்கீடே இந்த முறையும் பின்பற்ற வேண்டும்” என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கு, அண்ணா பல்கலைக்கழகம் “பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்புக்கு 10 சதவீதம் இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்தவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளது.