டிரெண்டிங்

துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளரை சிறைப்பிடித்த புகார்: திமுகவினர் 2 பேர் கைது

Veeramani

துறைமுகம் பாஜக வேட்பாளரை சிறைப்பிடித்த புகாரில் திமுகவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம், தனது நண்பரான ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த கரண்ராஜ் என்பவரை சந்திக்க நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த திமுகவினர் சிலர், வினோஜ் செல்வம் பணப்பட்டுவாடாவில் ஈடுபட வந்துள்ளதாக கூறி கதவை மூடி சிறைபிடித்தனர். உடனடியாக பாஜகவினர் தகவல் அறிந்து அங்கு வந்ததால், திமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

காவலர்கள் வந்து வினோஜ் செல்வத்தை மீட்டு விசாரித்தனர். இருதரப்பினரும் புகார் அளித்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர், சங்கர், ஆனந்த் ஆகிய இரு திமுகவினரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பாஜக வேட்பாளரை சிறைபிடித்த புகார்- 2 பேர் கைது