டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: 25-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை வழங்கிய அறக்கட்டளை

JustinDurai

பெரம்பலூர் மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 'புதிய தலைமுறை' துளிர்க்கும் நம்பிக்கை சார்பில், அரிசி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பல குடும்பங்களுக்கு 'புதிய தலைமுறை' துளிர்க்கும் நம்பிக்கையின் சார்பில் பல்வேறு உதவிகளை சமூக ஆர்வலர்களின் ஆதரவுடன் உதவி வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, நூத்தப்பூர், கைகளத்தூர், பாதாங்கி, காரியானூர், வெள்ளுவாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 25-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 'புதிய தலைமுறை' துளிர்க்கும் நம்பிக்கை சார்பில், பிரம்பரிஷிமலை மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், ரோகினி அம்மையாளர், தவயோகி தவசி ஐயா, மருத்துவர் ராஜாசிதம்பரம் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி,பருப்பு,எண்ணெய் உள்ளிட்ட மளிகைப்பொருட்களை வழங்கினர்.

அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சிக்கும், எளம்பலூர் பிரம்பரிஷி மகா சித்தர்கள் அறக்கட்டளைக்கும் நன்றி தெரிவித்தனர்.