டிரெண்டிங்

அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை: அமைச்சர் பகீர் புகார்

webteam

அரசு நிலைக்காது என்ற அச்சத்தில் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என அமைச்சர் சீனிவாசன் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சீனிவாசன், அதிமுக ஆட்சி நிலைக்காதோ என்ற அச்சத்தில், தமிழக அரசு அதிகாரிகள் சிலர், திமுகவுடனும், மாற்று கட்சியினருடனும் பேசி வருவதாகவும், அவர்களின் அறிவுரைப்படி அதிகாரிகள் அரசுடன் ஒத்துழைக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.