டிரெண்டிங்

திருமங்கலத்தில் 16 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்த மணமகன் உட்பட ஐவர் கைது.

kaleelrahman

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, 16 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்த மணமகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருமங்கலம் அருகே விளாச்சேரி பசும்பொன் நகரை சேர்ந்தவர் தர்மர் மகன் கிருஷ்ணகுமார் (27). இவருக்கும் மேல உரப்பனூர் சிவன்ராஜ் என்பவரின் 16 வயது மகளுக்கும் விளாச்சேரியில் குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் சமூக நலத்துறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் பஞ்சவர்ணத்திற்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மணமகன் கிருஷ்ணகுமார், மணமகளின் தந்தை சிவன்ராஜ், தாய் கவிதா, மணமகனின் தந்தை தர்மர், தாய் கழுவாய் ஆகிய 5 பேர் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
மேலும் 16 வயது இளம் பெண்ணை மீட்டு அரசு காப்பகத்தில் வைத்துள்ளனர். திருமங்கலம் அருகே குழந்தை திருமணத்தில் மணமகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.