டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: வறியோருக்கு உதவிட கரம் நீட்டிய முக்கிய பிரமுகர்கள்

நிவேதா ஜெகராஜா

பொதுமுடக்கத்தால் வருவாய் இழந்து தவித்த வறியோருக்கு, 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை'யின் மூலம் உதவிகள் கிடைத்துள்ளன.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி ரமேஷுக்கு, தொழிலதிபர் கே.எம்.ரவிச்சந்திரன், அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் பண உதவிகள் வழங்கினார்.

இதேபோல், பெரம்பலூரில் உள்ள 25 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் கே.ஆர்.வி.கணேசன் நிவாரணப்பொருட்கள் மற்றும் தலா 1000 ரூபாய் நிதி வழங்கி செய்தார்.