டிரெண்டிங்

"ரூ.6000 கொடுப்பாங்க; வாங்கிக்கொண்டு கதையை முடிச்சிடுங்க" - டிடிவி தினகரன்

webteam

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய்களைகூறி தான் வாக்கு சேகரித்து வருகிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் டிடிவி தினகரன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, விழுப்புரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய அமைச்சர் சி.வி. சண்முகம் 200 கோடி ரூபாயை தயாராக வைத்துள்ளதாக கூறினார். மேலும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை தான் மீண்டும் மக்களிடம் கொடுப்பதாகவும், அதனை பெற்றுக்கொண்டு மாற்றி வாக்களியுங்கள் எனவும் அவர் பேசினார்.