டிரெண்டிங்

கொரோனா நடவடிக்கைகள்: 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் செப். 23 வீடியோ கான்பரன்ஸ்

sharpana

கொரோனா தொற்றுநோய் நிலைமை மாநிலங்களில் எப்படி உள்ளது என்று பிரதமர் மோடி செப்டம்பர் 23 ஆம் தேதி ஏழு மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸில் பேசவுள்ளார்.

கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மாநிலங்களில் கொரோனா தொற்றால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், எத்தனை சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவின் தீவிரம் குறித்தெல்லாம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸில் உரையாடி வருகிறார். இந்நிலையில், வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில் டெல்லி, மத்திய பிரதேசம். ஆந்திரா, உத்திரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஏழு மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.