டிரெண்டிங்

அமேதி செல்கிறார் ராகுல் காந்தி: விவசாயிகளுடன் ஆலோசனை

rajakannan

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதிக்கு இன்று செல்கிறார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு ராகுல் காந்தி மேற்கொள்ளும் முதல் சுற்றுப் பயணம் இது. முதல் நாளில் கதுரா கிராமத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வரும் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் பொறுப்பேற்பார் என கூறப்பட்டு வரும் நிலையில், குஜராத் மாநிலத்தை தொடர்ந்து, அமேதியில் ராகுல்காந்தி சுற்றுப் பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னதாக ராகுல் காந்தியின் வருகைக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் உள்ளதாக ரேபரேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார். பெரும்பாலான போலீசார் தசரா மற்றும் மொஹரம் போன்ற பண்டிகைகள், சிலைக் கரைப்பு உள்ளிட்டவற்றிற்கு பாதுகாப்புக்காக சென்றுவிட்டதாக கூறினார். இதற்கு அம்மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல்காந்தியின் பயணத்தை கண்டு யோகி ஆதித்யநாத் பயப்படுவதாக கூறினர்.