டிரெண்டிங்

ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் கைது

webteam

திருவாரூரில் பள்ளி மாணவியை ஆசை வார்த்தைக்கூறி கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கிராமத்தில் விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு வந்த 17 வயது சிறுமியுடன், அதேபகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அருண்குமார் என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்த பழக்கத்தால் சிறுமி ஆறு மாதம் கர்ப்பம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் தப்பி ஓடிய அருண்குமாரை திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.