டிரெண்டிங்

"கொரோனா நோயாளி மனம் குளிர செயல்பட்டவர் விஜயபாஸ்கர்!" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

sharpana

புதுக்கோட்டையில் போட்டியிடும் விஜயபாஸ்கருக்கு ஆதரவு கேட்டு முதல்வர் பரப்புரை மேற்கொண்டபோது, ”சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் திறம்பட நிர்வகித்ததால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் சொல்லி, மருத்துவர்களிடம் சரியான சிகிச்சை அளிக்கவேண்டும் என்று சொல்லி கொரோனா பாதித்தவர்கள் மனம் குளிரும் அளவுக்கு செயல்பட்டார் விஜயபாஸ்கர்” என்று பாராட்டினார்.