டிரெண்டிங்

சென்னையில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் சென்ற பா.ஜ.கவினர் - தடுத்து நிறுத்திய போலீசார்

kaleelrahman

தடையை மீறி விநாயகர் சிலையை வாகனத்தில் ஏற்றி ஊர்வலம்.

சென்னை வேளச்சேரி பிரதான சாலை முதல் 100 அடி சாலை வரை விநாயகரை சிலையை ஜீப்பின் முகப்பில் வைத்து 100 க்கும் மேற்பட்ட பாஜக இளைஞரணியினர் ஊர்வலமாக கொண்டுவந்து ஏரியில் கரைத்தனர்.

இதையறிந்து அங்கு வந்த காவல் துணை ஆணையர் விக்ரமன் பா.ஜ.கவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உயர்நீதிமன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு வந்துள்ளீர்கள் இது சட்டப்படி தவறு என்று பா.ஜ.க இளைஞர் அணியை சேர்ந்த செல்லப்பாண்டியன் உள்ளிட்டோரிடம் கூறினார்.


நீங்கள் அனைவரும் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்ததற்காக உங்களை நாங்கள் கைதுசெய்ய போகிறோம் என்று காவல் துணை ஆணையர் விக்ரமன் எச்சரிக்கை விடுத்தார்.


பின்பு உயர் அதிகாரிகளிடம் பேசிய காவல் இணைஆணையர். உங்களை நாங்க கைது செய்யவில்லை அமைதியாக கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். அனுமதியில்லாமல் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்தி நெரிசல் ஏற்பட்டு பரபரப்பாக இருந்தது.