டிரெண்டிங்

“தமிழகத்திலும் தாமரை மலரும். இந்த மண்ணையும் மாற்றுவோம்”: சென்னையில் ஜெ.பி.நட்டா பேச்சு

rajakannan

தமிழகத்திலும் தாமரை மலரும் என்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 51ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார்.

ஜெ.பி.நட்டா பேசுகையில், “ பிரதமர் மோடி கொண்டு வரும் திட்டங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல ஆதரவு இருக்கிறது. அந்த ஆதரவால்தான் எல்லா தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி மேல் வெற்றி பெறுகிறோம். அதேபோல், எங்களுடைய தாமரை தமிழகத்திலும் மலரும். பிரதமர் மோடி நிறைய ஆதரவு இருக்கிறது. இந்த மண்ணையும் நாங்கள் மாற்ற விரும்புகிறோம்” என்று கூறினார்.