டிரெண்டிங்

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்... வரவேற்ற தளி தொகுதி எம்.எல்.ஏ...

kaleelrahman

ஓசூரில் அதிமுக, அமமுக கட்சிகளிலிருந்து விலகிய 300-க்கும் மேற்பட்டோர் தளி எம்எல்ஏ பிரகாஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாற்றுக்கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஓசூர் எம்எல்ஏ சத்யா தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக, அமமுக கட்சிகளிலிருந்து விலகிய பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். 

புதியதாக திமுகவில் இணைந்தவர்களை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷ் அனைவரையும் பாராட்டி வரவேற்று பேசினார். அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், மாவட்ட அவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.